Saturday, December 22, 2012
அந்த ஒரு கேள்வி
படித்து தெளிந்த பின்னும்
பதில் கூற முடியாமல்
பாமரனிடம் தோற்கச்செய்த
அந்த ஒரு கேள்வி
இன்னும் என் நினைவில்
நீங்காத காயங்களாய்!
தூக்கத்தில் கூட,
கவிசேர்க்கும் என்னை
சிந்தனை குதிரைகளை
ஓடவிடும் நேரத்தில்
அந்த ஒரு கேள்வி
இன்னும் உறங்கவிடாமல்!
ஆயிரம் கவிதைகளில்,
ஆழ்ந்த கருத்துகளால்,
அறிவுரை கேள்விகளுடன்,
பறந்து வந்த என்னை
அந்த ஒரு கேள்வி
சிறகை என்னுடன் நெருங்கவிடாமல்!
கவிதை மன்றத்தில்
கவிபாடிய என்னிடம்
மண்ணில் அமர்ந்தபடி
கேட்கப்பட்ட
அந்த ஒரு கேள்வி
“ஆயிரம் கருத்தை சொன்னீரே
நீவீர் அதன்படி நடந்தீரா?”
Thursday, December 20, 2012
வெற்றியின் தங்கை
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீ என்னை துயரப்படுத்தினாலும்
நீ என்னை காயப்படுத்தினாலும்
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீ என் கனவுகளை
திருடிச்சென்ற போதிலும்
நீ என் முன்னேற்ற படிகளையெல்லாம்
இடித்துவிட்ட போதிலும்
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீயே என் தலைகணத்தை
குறையவைத்தவள்
நீயே என் கலைநயத்தை
உயரவைப்பவள்
வெற்றியின் தங்கையே
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
உனை நான்
வரவேற்கிறேன்!
நீ என்னை துயரப்படுத்தினாலும்
நீ என்னை காயப்படுத்தினாலும்
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீ என் கனவுகளை
திருடிச்சென்ற போதிலும்
நீ என் முன்னேற்ற படிகளையெல்லாம்
இடித்துவிட்ட போதிலும்
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீயே என் தலைகணத்தை
குறையவைத்தவள்
நீயே என் கலைநயத்தை
உயரவைப்பவள்
வெற்றியின் தங்கையே
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
வெற்றியின் தங்கை
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீ என்னை துயரப்படுத்தினாலும்
நீ என்னை காயப்படுத்தினாலும்
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீ என் கனவுகளை
திருடிச்சென்ற போதிலும்
நீ என் முன்னேற்ற படிகளையெல்லாம்
இடித்துவிட்ட போதிலும்
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீயே என் தலைகணத்தை
குறையவைத்தவள்
நீயே என் கலைநயத்தை
உயரவைப்பவள்
வெற்றியின் தங்கையே
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
Tuesday, December 18, 2012
கும்கி விமர்சனம்
யானைகளை வைத்து பிழைப்பு நடத்தும் தனது நண்பர் ஒருவருக்காக கோவில் திருவிழா, கல்யாண விழா போன்ற ஊர் விழாக்களுக்கு பழக்க படுத்த பட்ட தன்னுடைய உரிமம் இல்லாத யானையுடன் ஆதி காடு என்ற மலை கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்ட கும்கி அல்லாத தன்னுடைய யானையை கும்கி யானை என்று சொல்லி இரண்டு நாட்களில் திரும்பி விடும் நம்பிக்கையில் வருகிறார்கள் கதா நாயகனான அந்த யானையின் பாகன் விக்ரம் பிரபு, அவரது மாமா தம்பி ராமையா மற்றும் அஸ்வின் ராஜா. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் அந்த ஆதி காடு கிராமமே அவர்களை தங்களை காக்க வந்த கடவுளாய் வணங்குகிறார்கள்.
உண்மையான கும்கி யானை வரும் வரைக்கும் ஊர் மரியாதையை அனுபவிக்கலாம் என்று முடிவெடுக்கும் விக்ரம் பிரபு அந்த கிராமத்தின் ஊர் தலைவரின் மகளான லக்ஷ்மி மேனனை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் கொள்கிறார். காதலில் மூழ்கி தவிக்கும் விக்ரம் பிரபு அந்த காதலுக்காக அறுவடை முடியும் வரையிலும் கொம்பன் யானையை விரட்ட அங்கேயே இருக்க முடிவு செய்கிறார்.
உரிமம் இல்லாத யானை, எந்த நேரமும் காட்டுகள் இருந்து ஊருக்குள் இறங்கி விடும் காட்டு யானையின் சூழல், தனது காதல் தெரிந்தால் கட்டுப்பாடான அந்த ஊருக்குள் நடக்க போகும் விபரீதம் இவை மூன்றையும் எப்படி கதா நாயகன் சமாளிக்க போகிறார் இறுதியில் என்ன நடந்தது இது தான் கும்கி படத்தின் கதை சுருக்கம்.
கதாநாயகன் விக்ரம் பிரபுவுக்கு இது முதல் படம் சிவாஜியின் பேரன் என்றாலும் இன்னும் நடிப்பில் முதிர்ச்சி பெற அனுபவம் தேவை.
நாயகி லக்ஷ்மி மேனனுக்கும் இது தான் அறிமுக படம், மைனா அமலா பாலை போல இவரும் இன்னும் பல படங்களில் வளம் வருவார் என்று நம்பலாம்.
கௌரவ வேடத்தில் தம்பி ராமையா காமெடியிலும் பின்னி இருக்கிறார். கொம்பன் யானை எந்த நேரத்திலும் இறங்கலாம் என்ற தவிப்பில் அவரது நடிப்பை பார்த்து சிரிக்காதவர் யாருமே இல்லை.
இசையமைப்பாளர் டி. இமானுக்கு இந்த படமும் ஒரு முக்கிய படமாக அமைந்து விட்டது பாடல் வெளியான சில நாட்களிலேயே தெரிந்து விட்டது ஆனாலும் ஒவ்வொரு பாடலும் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலயே அந்த பாடலுக்கான இசைய ஆரம்பித்துவிடுவது அடுத்து பாடல் வருவதற்கான உணர்வை தந்துவிடுகிறது.
ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்த படத்தில் தனது முழு திறமையையும் காட்டி உழைத்திருக்கிறார். சொல்லிட்டாலே பாடலில் அருவியை அவர் படம் பிடித்த விதம் மிக அருமை, படத்தின் மிக பெரிய பலம் இவரது ஒளிப்பதிவு.
மைனா படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கி இருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு பல மடங்காக இருந்தும் அதை ஓரளவு தான் சமாளித்திருக்கிறார், திரைக்கதையில் இன்னும் வேகம் தேவை.
அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் நிச்சயம் படத்தை ரசிக்கலாம்.
Friday, November 23, 2012
மாற்றங்கள்
பேருந்திலிருந்து
இறங்கியதிலிருந்தே
ஒரு சின்ன சந்தேகம்
சேர்ந்துகொண்டே
வருகிறது
இது என் ஊர் தானா?
சத்தியமாய்
இது என் ஊர் தான்
சோல்லிக்கொண்டே
நடந்தேன்
சிறு வயதில்
சம்சு வும் நானும்
சேர்ந்து விளையாடிய
மணல் வீதிகள்
இப்போது
எங்கே போயின?
எப்போதும்
நிறைந்தேயிருக்கும்
அரசன் குளத்தின்
தண்ணீர் எங்கே?
ஓவ்வொறு
வீடுகளின் வாசலிலும்
வளர்ந்து கிடந்த
பூவரசகள்
இப்போது
வீட்டினுள்ளே
குரோட்டன்சுகளாய்
மணற்பரப்பாய் கிடந்த
சினிமா கொட்டகையிலோ
இன்று
வெல்வட்டு சீட்டுகள்
எல்லாமே மாறிவிட்டது
ஏன் அங்கே
ஒரு மனிதனை
ஐந்து பேர்கள்
விரட்டுகின்றனர்?
எல்லாம் மாறினாலும்
மாறவேயில்லை
ஊரில் ஒவ்வொருவாரின்
சாதிய எண்ணங்கள்!
Thursday, November 1, 2012
Monday, October 29, 2012
புறவாசல்
எங்கள் வீட்டு
புறவாசல்
நானே அறியாமல்
நான் வளர்ந்த
புறவாசல்!
முதல் முதலாக
எனது கிறுக்கல்கள்
ஆரம்பமானதும்
அங்குதான்
செடி கொடிகளுடன்
நான் பேசக்கற்றுக்கொண்டதும்
அங்குதான்
என்னுடைய எல்லா
உணர்வுகளையும்
புரிந்துகொள்ள
புறவாசலில்
எனக்கென்று உண்டு
ஒரு வேப்பமரம்!
என் கோபப் பொழுதுகளில்
அது அடிவாங்கிகொள்ளும்
என் வெற்றி பொழுதுகளில்
அது பூமாரித்தூ வும்
தொட்டில் வயது
கழிந்தும் கூட
எனது தொட்டிலின்
உத்திரமாய்
இருந்தது அந்த வேப்பமரம்
வசந்த காலத்தை
உணர வைத்ததும்
இலையுதிர் காலத்தை
வெறுக்க வைத்ததும்
அந்த வேப்பமரமே
வேப்பங்காற்றுக்கு
இணையான காற்று
எதுவுமில்லை என்று
புரிந்து கொண்டதும்
அங்கு தான்
வேப்பம்பூக்களும்,
வேப்பம்பழங்களும்
அங்கங்கு சிதறி
அழகாகவே இருக்கும்
புறவாசல்
வீடுமாறி நாளாகிவிட்டது
எதேச்சையாய்
பழைய வீடு போனபோது
வேப்பம்பூக்களின் சிதறல்களும்,
வேப்பம்பழங்களும்,
வேப்ப மரமுமே
இல்லாமல்
கலை இழந்து கிடந்தது
புறவாசல்!
Friday, October 26, 2012
இயந்திர வாழ்க்கை
சினிமா கொட்டகைக்கு
குடும்பத்துடன் சென்று
மணர் பரப்பில் அமர்ந்து
பொழுது போக்கிற்காக இல்லாமல்
ஏதோ ஒரு மகிழ்ச்சிக்காக
இப்போது அமைதியாய்
அழுது கோண்டே பார்க்கப்படுகிறது
சீரியல்!
ஆட்டுரலில் அம்மாக்கள்
இட்லிக்கு மாவரைக்கையில்
உதவி புரியும் மகன்கள்
இப்போது தேவையே இல்லை
வேகமாய் அரைக்க வந்துவிட்டது
ஒவ்வொரு வீடுகளிலும்
கிரைண்டர்!
அம்மாக்களின் கைப்பக்குவம் சொல்லும்
அம்மிகள் இப்போது
கல்யாண மேடைகளில் மட்டுமே!
எல்லாவற்றையும் அரைக்க
மிக்சி!
விறகடுப்பில் சமைக்கும் போது
விறகொடித்து போடும்
மகன்கள் இனி இல்லவே இல்லை!
எல்லாம் கிடைத்துவிட்டதாய்
பெருமை படும் அம்மாக்களுக்கு
தெரிவதேயில்லை
எல்லாவற்றையும் இழந்து விட்டதை!
அந்த நாட்கள்
பிரிக்க முடியாதபடி
சேர்ந்தே இருக்கிறது
என் பழைய நினைவுகளோடு
உன் நினைவுகளும்
புத்தகச் சுமையைத்தவிர
வேறெந்த சுமையும் இல்லாத
அந்த நாள் ஞாபங்கள்
என் மனச்சுமையை
மேலும் அதிகரிக்கிறது
தோலைக்காட்சியில் தெரிவோம்
என்ற நம்பிக்கையிலே
பக்கத்து வீட்டு
பங்கஜம் மாமியின்
ஆன்டெனா கம்பியை
தொங்கி உடைத்தது!
பிள்ளையார் கோயிலிலே
விடலை போட்ட தேங்காயினை
நம்மை விட சிறுவனிடம்
தட்டிப்பறித்தது!
குச்சி கம்பு விளையாடுகையில்
நீ அடித்த குச்சி
சோமு தாத்தாவின்
முதுகில் பட
அவர் நம்மை துரத்தி வந்தது!
சும்மாயிருந்த நாயின்மீது
கல்லெறிந்து
அது நம்மை கடிக்க வந்தது!
இப்படி எத்தனையோ
ஞாபங்கள்..
பரண் மீது தூங்கிகொண்டிருக்கும்
நினைவுகளில்
அதை எதிர்ப்பார்க்கும்போதெல்லாம்
அதன் தூசி பட்டு
என் கண்ணை உறுத்துகிறது!
Subscribe to:
Comments (Atom)

















