Monday, August 10, 2015

கனவுகள்


கனவுகள்
எனது கவிதைகள்
கண்களே அறியாத காட்சிகள்,
இருளிலும் அழியாத
வெளிச்சங்கள்!

கனவுகள்
இரவிலே எனது
பாதைகள்,
இதயம் இனிக்கும்
இன்பங்கள்!

கனவுகள்
ஆகாயம் தொட்டுவிடும்
ஆசைகள்,
அணையாதிருக்கும்
நெருப்புகள்!

கனவுகள்
விதைகளாயிருக்கும்
விருட்சங்கள்
வாழ்வை எட்டிப்பார்க்கும்
இலட்சியங்கள்!

0 திட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்:

Post a Comment