கனவுகள்
எனது கவிதைகள்
கண்களே அறியாத காட்சிகள்,
இருளிலும் அழியாத
வெளிச்சங்கள்!
கனவுகள்
இரவிலே எனது
பாதைகள்,
இதயம் இனிக்கும்
இன்பங்கள்!
கனவுகள்
ஆகாயம் தொட்டுவிடும்
ஆசைகள்,
அணையாதிருக்கும்
நெருப்புகள்!
கனவுகள்
விதைகளாயிருக்கும்
விருட்சங்கள்
வாழ்வை எட்டிப்பார்க்கும்
இலட்சியங்கள்!
0 திட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்:
Post a Comment